தமிழ்நாடு
பாமகவின் மாநில துணை தலைவரானார் நடிகர் ரஞ்சித்!
பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த ஜூலை மாதம் இணைந்த நடிகர் ரஞ்சித்தை இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் துணைத்தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பொன்விலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் 1993-ம் ஆண்டுத் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரஞ்சித் சிந்து நதிப்பூ, மறுமலர்ச்சி, அவதார புருஷன், மைனர் மாப்பிள்ளை, பாண்டவர் பூமி உள்ளிட்ட நடித்துள்ளார்.
அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்து வந்த ரஞ்சித் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளித்து வந்தார். ஆனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்ததில் அதிருப்தி அடைந்து அதிமுகவில் பெரியதாகச் செயல்படாமல் இருந்து வந்தார்.
ஆனால் கடந்த ஜூலை மாதம் பாமகவில் இணைந்த ரஞ்சித்திற்கு மாநில துணை தலைவர் பதவி அளித்து ஆச்சரியத்தினை அளித்திருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவரான ராமதாஸ் அறிவித்து ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளார்.