பர்சனல் ஃபினான்ஸ்
பிஎப் கணக்குடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் நன்மை அதிகரிப்பு!
வருங்கால வைப்பு நிதி ஆணையம், பிஎப் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள காப்பீடு திட்டத்தின் நன்மையை அதிகரித்து அறிவித்துள்ளது.
பிஎப் கணக்கு உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் பணியில் இருக்கும் வரை இந்த காப்பீட்டின் நன்மையைப் பெற முடியும்.
பணியில் உள்ள ஊழியர் ஒரு இயற்கையாகவும் உடல்நலக் குறையாவாளும் விபத்தாலும் இறக்கும் போது இந்த காப்பீட்டின் கீழ் 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த 6 லட்சம் ரூபாய் காப்பீடு தொகையை, 7 லட்சம் ரூபாயாக அதிகரித்து வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிவித்துள்ளது.
ஈபிஎப், ஈபிஎஸ் என இரண்டுடனும் இணைத்து இந்த காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த காப்பீட்டைப் பெற ஒரு நிறுவனத்தில் 12 மாதங்கள் வரை ஒரு ஊழியர் பணிபுரிய வேண்டும் என்ற எந்த வரம்பும் கிடையாது, ஆனால் ஊழியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று இருந்தால் அல்லது ராஜினாமா செய்து இருந்தால் காப்பீட்டை பெற முடியாது.