வணிகம்
2022-ம் ஆண்டுக்குள் 12,000 அமெரிக்கர்களை பணிக்கு எடுக்கும் இன்ஃபோஸிஸ்!
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 12,000 அமெரிக்கர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
2017-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் அடுத்த 3 ஆண்டுகளில் 10,000 அமெரிக்கர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக அறிவித்து இருந்தது.
ஆனால் சொன்னைதை விடக் கூடுதலாக 3000 ஊழியர்கள் என மொத்தம் 13,000 அமெரிக்கர்களுக்கு இன்ஃபோசிஸ் பணி வாய்ப்பை அளித்துள்ளது. இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்குள் 12,000 அமெரிக்கர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக இன்ஃபோசிஸ் அறிவித்துள்ளது.
சென்ற மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவின் இண்டியானா, வட கரோலினா, கனெக்டிகட், ராஷ்டி ஐஸ்லாந்து, டெக்சாஸ் மற்றும் அரிசோனா ஆகிய நகரங்களில் 6 தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையங்களை இன்ஃபோசிஸ் நிறுவியுள்ளது.
உள்ளூர் ஊழியர்களையே பணிக்கும் அமர்த்தும் நோக்கத்தில் சென்ற நிதியாண்டில் 78 சதவீத முத்த நிர்வாகிகளை அமெரிக்கர்களாக பணிக்கு அமர்த்தியுள்ளது இன்ஃபோசிஸ். இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் பணியிடங்களில் இந்தியர்களுக்குத் தான் முன்னுரிமை அளிக்கின்றன என்ற பிம்பத்தை இன்ஃபோசிஸ் மாற்ற அதிக வாய்ப்புள்ளது.