இந்தியா
இந்தியாவில் ஒரே நாளில் 4.4 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை; 48,661 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்தியாவில் சனிக்கிழமை ஒரே நாளில் 4.4 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் 48,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுவரை இந்தியாவில் 1,62,91,331 நபர்களுக்கு கொரோனா சோதனை செய்து, அதில் 13,85,522 பேருக்கு கொரோனா உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். 8,85,576 நபர்கள் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
32,063 நபர்கள் இறந்துள்ளனர். 4,67,882 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.