இந்தியா
ஒரே நாளில் 48,916 நபர்களைப் பாதித்த கொரோனா.. அதிர்ச்சியில் இந்தியா!
இந்தியாவில் ஒரே நாளில் 48,916 நபர்களை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 48,916 நபர்களை கொரோனா தொற்று பாதித்ததை அடுத்து, இந்தியாவில் 13 லட்சத்து 36 ஆயிரத்து 861 நபர்களை கொரோனா தொற்று பாதித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து 8,49,432 நபர்கள் குணமடைந்துள்ளார்கள். 4 லட்சத்து 56 ஆயிரத்து 71 நபர்கள் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். 31,358 நபர்கள் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 1,99,749 நபர்களை கொரோனா தொற்று பாதித்துள்ளது. 1,43,297 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 3,320 நபர்கள் இறந்துள்ளனர்.