சினிமா செய்திகள்
நடிகையர் திலகம் இயக்குநர் உடன் கைகோர்க்கும் தீபிகா படுகோன், பிரபாஸ்!
நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் உடன் ஜோடி சேர்ந்து புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகையர் திலகம் படம் மூலமாக திரை உலகினரைத் திரும்பப் பார்க்க வைத்த இயக்குநர் நாக் அஷ்வின். தற்போது பிரபாஸ் நடிப்பில் சையின்ஸ் பிக்ஷன் படம் ஒன்றை எடுப்பதற்கான பணிகளில் முழுவீச்சாக உள்ளார்.
இந்நிலையில் அந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தீபிகா படுகோனுக்கு இதுவே முதல் நேரடி தெலுங்கு திரைப்படமாகும். தெலுங்கு, தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளது. வைஜெயந்த்தி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
பாகுபலி என்ற பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிராபஸ் நடித்த சாஹோ திரைப்படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. அதை அடுத்து பிரபாஸ் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பிரபாஸ்க்கு இந்த இரண்டு திரைப்படங்களும் வெற்றியை பெற்று தருமா?