இந்தியா
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி.. எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை!
![Covaxin - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/07/Covaxin.jpg)
கொரோனாவுக்கு எதிரான கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
பாரத் பையோ டெக் நிறுவனத்தால், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்ஸின் தடுப்பூசியை மனிதர்கள் மீது சோதனை செய்ய இந்திய மருத்துவ கவுன்சில் ஐசிஎம்ஆர் அனுமதியளித்துள்ளது.
முதற்கட்டமாக 12 மருத்துவமனைகளில் கோவாக்ஸின் மருந்தைச் சோதனை செய்ய ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 22 முதல் 50 வயதுக்கு உட்பட்ட, 10 கோரோனா நோயாளிகள் தேர்வு செய்யப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த மருந்தை எடுத்துக்கொள்வதற்கான முதல் தடுப்பூசியை இன்று சோதனை செய்யும் நிலையில், இரண்டாவது டோஸ் 14 நாட்கள் முடிந்த பிறகு போடப்படும். இந்த சோதனையில் வெற்றிபெற்றால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசி என்ற பெருமை கோவாக்ஸின்க்கு கிடைக்கும்.