வணிகம்
தடையை மீறி இந்தியாவில் புதிய அலுவலக ஒப்பந்தம் போட்ட டிக்டாக்!
சீன நிறுவனமான பைட் டான்ஸின் டிக்டாக், ஹேலோ செயலிகள் இந்தியாவில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்ட போதிலும், மும்பையில் 1,200 பேர் அமர்ந்து பணி செய்யக்கூடிய அலுவலகத்திற்கான ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவில் 2018-ம் ஆண்டு டிக்டாக் செயலியை அறிமுகம் செய்த பைட் டான்ஸ் நிறுவனம் இதுவரை 2000 நபர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அடுத்த ஒரு ஆண்டில் டிக்டாக் செயலிக்காக மட்டும் கூடுதலாக 1,000 நபர்களை பணிக்கு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு இந்தியாவில் விகோ விடியோ, ஹேலோ சமூக செயலி மற்றும் ரெஸ்ஸோ என்ற தெற்காசிய மியூசிக் ஸ்ட்ரீம் செயலியையும் அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தென் இந்தியாவில் ஹைதராபாத் மட்டுமல்லாமல் பெங்களூருவிலும் கிளை அலுவலகத்தைத் திறக்கும் திட்டத்தை மட்டும் தள்ளிவைத்துள்ளது.
சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை உள்ள நிலையிலும், பைட் டான்ஸ் எப்படி தங்களது அலுவலகத்தை விரிவு படுத்துகிறது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்ப்டுத்தியுள்ளது.