இந்தியா
டிக்டாக், பேஸ்புக் உட்பட 89 செயலிகளுக்குத் தடை விதித்த இந்திய இராணுவம்!
இந்திய இராணுவத்தினர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிண்டர், டிக்டாக், ஷார்இட் உட்பட 89 செயலிகளைப் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த செயலிகளைப் பயன்படுத்தும் இராணுவத்தின் தகவல்கள் வெளியில் கசிகின்றன. எனவே இராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் மொபைல் போனில் பட்டியலிடப்பட்டுள்ள 89 செயலிகள் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்று இராணுவம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த தடையில் பப்ஜி, கிளாஷ் ஆப் கிங்ஸ், மொபைல் லெஜெண்ட்ஸ் உள்ளிட்ட கேம் செயலிகளும் அடங்கும்.
அண்மையில், மத்திய அரசு 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்த நிலையில், இராணுவம் தற்போது அதனுடன் சேர்த்து மொத்தம் 89 செயலிகளுக்குத் தடை விதித்து இருப்பது, அந்த செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.