சினிமா செய்திகள்
மீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் வடிவேலு!
வின்னர், தலைநகரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகச்சுவை வெற்றிக் கூட்டணி அமைத்த வடிவேலு, சுந்தர் சி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாகத் தகல்கள் வெளியாகியுள்ளன.
வடிவேலு, சுந்தர்.சி இணையும் படத்தைச் சிம்பு நடிப்பில் தொட்டி ஜெயா, பரத் நடிப்பில் நேபாளி ஆகிய படங்களை இயக்கிய வி.ஜீ.துரை இயக்க உள்ளார். தான் இயக்கிய ஒவ்வொரு படத்தில் ஒரு தனித்துவமான கதைக் களத்துடன் கொடுத்த வி.ஜீ.துரை இந்த படத்தையும் வித்தியாசமாக இயக்குவார் என்று கூறப்படுகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் வின்னர் படத்தில் வடிவேலு எற்ற கைப்புள்ள மற்றும் சுந்த.சி நாயகனாக நடித்த தலைநகரம் படத்தில் வடிவேலு ஏற்ற நாய் சேகர் ஆகிய கேரக்ட்டர்கள் அவர்கள் இருவரின் திரைத்துறை வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாகும்.