இந்தியா
தெருக்கடை வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடன் உதவி; மத்திய அரசு அதிரடி!
கொரோனா நிவாரண நிதியாக பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான இரண்டாம் கட்ட அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.
அதில், 50 லட்சம் கோடி தெருக்கடை வியாபாரிகளுக்கு தலா ரூ.10,000 கடன் உதவி வழங்க 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த தொருக்கடை வியாபாரிகள், தங்களுக்குச் சேமிப்பு அல்லது நடப்பு கணக்கு வைத்து இருக்கும் பொதுத் துறை வங்கிகள் மூலம் இந்த 10,000 ரூபாய் கடனுதவியைப் பெற முடியும்.
இந்த கடனுதவி கிட்டத்தட்டச் சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு அளிக்கும் ஓவர் டிராப்ட் கடன் உதவி திட்டம் போன்றே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வியாபாரிகள் வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்காமல், குறைந்த வட்டியில் வங்கியில் கடன் பெற்றாலாம். அதை பயன்படுத்தி வியாபாரத்தை மீண்டும் தொடங்கி வாழ்வாதாரத்தை பெருக்காலாம்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குக் கடன் உதவிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள், தெருக்கடை வியாபாரிகளுக்குச் சிறு கடன், வேலை இழந்த மலை வாழ் மக்களுக்கு நிதி உதவி, புறநகர்களில் வாடகைக்குக் குடியிருக்கும் மக்களுக்குக் குறைந்த வாடகை வீடு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.