பர்சனல் ஃபினான்ஸ்
‘எஸ்பிஐ வீ கேர் டெபாசிட்’ மூத்த குடிமக்களுக்காக எஸ்பிஐ அறிமுகம் செய்யும் புதிய திட்டம்!
எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி மூத்த குடி மக்களுக்காக புதிய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கால், இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது. அதை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தது. அதனால் வங்கிகளும் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து வருகின்றன.
இதில், மூத்த குடிமக்கள் பாதிக்காத படி எஸ்பிஐ வீ கேர் எனற திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. எனவே மே 12 முதல் அமலுக்கு வரும் புதிய திட்டத்தைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
1) எஸ்பிஐ வங்கியின் பொதுவான ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுடன் ஒப்பிடும் போது, எஸ்பிஐ வீ கேர் திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடி மக்களுக்குக் கூடுதலாக 0.30 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.
2) 5 வருடங்கள் அல்லது அதற்கும் அதிகமான டெர்ம் டெபாசிட் திட்டத்தில் முத்த குடிமக்கள் முதலீடு செய்யும் போது கூடுதலாக 0.80 சதவீதம் வரை லாபம் அளிக்கும்.
3) எஸ்பிஐ வீ கேர் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 6.50 சதவீதம் வரை முத்த குடிமக்களுக்கு லபம் கிடைக்கும். முதிர்வு காலம் முன்பே முதலீட்டிலிருந்து வெளியேறினால் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உண்டு.
4) மூத்த குடிமக்கள் இல்லாத எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது அதிகபட்சம் 5.7 சதவீதம் வரையில் மட்டுமே லாபத்தைப் பெறுவார்கள்.