தமிழ்நாடு
மே 4-ம் தேதிக்குப் பிறகு ரயில் சேவை.. செண்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்னேற்பாடுகள்!
கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஊரடங்கு மே 3-ம் தேதியுடன் தளர்த்தப்பட்டால், தனிமனித இடைவேளியிடன் ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகளில் தென்னக ரயில்வே இறங்கியுள்ளது.
ஊரடங்கு முடிந்து சென்னை செண்ட்ரலில் இருந்து ரயில் சேவை தொடங்கினால், 4, 5 வது நுழைவுவாயில் வழியாக மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் வரும் பயணிகள், 6வது நுழைவு வாயல் வழியாக மட்டுமே வெளியில் செல்ல முடியும்.
ரயில் நிலயத்தில் காத்திருக்கும் போது, ரயிலில் ஏறும் போது தனிமனித இடைவெளியைப் பயணிகள் கடைப்பிடிப்பதற்காக வழிமுறைகள் வகுக்கப்பட்டு, அதற்கான பணிகளை ரயில்வே ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.