வணிகம்
அதிர்ச்சி.. பெங்களூருவில் ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த தனியார் நிறுவனம்!
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த உதான் இ-காமர்ஸ் நிறுவனம் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதான் இ-காமர்ஸ் நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர்.
கொரோனா பாதிப்பால், வியாபாரம் சரிந்துள்ளதால், தங்களது ஒப்பந்த பணியாளர்களில் பாதிக்கும் அதிகமாகக் குறைக்க உதான் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் இதை டிவிட்டர் மூலம் வெளியில் கொண்டு வந்துள்ளனர்.
ஊரடங்கை அறிவித்த பிரதமர் மோடி, எந்த ஒரு நிறுவனமும் ஊழியர்களுக்குச் சம்பளம் அளிக்காமல் இருந்துவிட கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் உதான் போன்ற சில நிறுவனங்கள், ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது, சம்பளம் அளிக்காமல் உள்ளது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.