வணிகம்
அனுமதி கிடைத்தும் உற்பத்தியைத் தொடங்க தயங்கும் மாருதி!
கொரோனா ஊரடங்கிலிருந்து கார் உற்பத்திக்கு ஹரியான அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் தற்போதைக்கு உற்பத்தியைத் தொடங்கப்போவதில்லை என்று மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹரியானாவில் உள்ள மருதி கார் உற்பத்தி தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 4696 பணியாளர்களை மட்டும் பயன்படுத்தி பணிகளைத் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
எனினும் தற்போதிஅக்கு கார் உற்பத்தி செய்ய இயலாது. எங்களுக்கு கார் உற்பத்தி செய்ய அனுமதி அளித்த போதிலும், எங்களுக்கான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அதுமட்டுமல்லாமல், கார் விற்பனையகங்களை திறக்காமல், உற்பத்தியை மட்டும் செய்தால் என்ன பயன் என்றும் மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.