தமிழ்நாடு
சென்னையில் 407 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு!
சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏப்ரல் 23-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உனவு கிடைக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு முடியும் வரை மக்களுக்கு இலவச உணவு வழங்க விருப்பம் உள்ள தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் சென்னை மாநகராட்சிக்கு நிதியை வழங்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி பல்வேறு தரப்பினரிடமிருந்து அம்மா நிதி கிடைத்துள்ளதால், இந்த இலவச உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காலையில் இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், புதினா சாதம், தக்காளி சாதம், இரவு சப்பாத்தி கடைந்த பருப்பு உள்ளிட்டவை அம்மா உணவங்களில் இலவசமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.