சினிமா செய்திகள்
கொரோனா நிவாரண பணிக்காக ரூ.1.30 கோடி நிதியுதவி செய்த விஜய்!
நடிகர் விஜய், கொரோனா தடுப்பு பணிக்காக 1.30 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்.
பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், தென்னிந்தியாவின் திரைப்பட ஊழியர் கூட்டமைப்புக்கு 25 லட்சம் ரூபாயும் விஜய் வழங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், கேரளா மாநிலத்துக்கு 10 லட்சம் ரூபாயும், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார்.
மேலும் தனது ரசிகர்கள் மன்றங்கள் மூலமாகவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கும் விஜய் 5 லட்சம் வழங்கியுள்ளார்.
ஆக மொத்தம் நடிகர் விஜய் கொரோனா பாதிப்பு நிவாரண பணிகளுக்காக 1.30 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும், கொரோனா விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என்று விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விஜய் தனது கொரோனா நிதியுதவி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.