தமிழ்நாடு
கள்ளச்சாராயம் காய்ச்சி டிக்டாக் வீடியோ வெளியிட்டவர்கள் கைது!
கொரோனா ஊரடங்கால், டாஸ்மாக் மது பான கடைகள் மூடப்பட்டு உள்ளது. எனவே பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி பலர் கைதாகியுள்ளனர்.
நாம் இப்போது பார்க்க இருக்கும் செய்தி, அதிலும் சற்று வித்தியாசமானது. தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் 4 பேர் பேஸ்புக் பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்சியுள்ளனர்.
வீட்டின் தொழுவத்திலேயே கள்ளச்சாராயம் காய்ச்சி அந்த 4 பேரும், டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளன.
தமிழ்நாட்டில் 1982-ம் ஆண்டு வன்செயல்கள் மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வன சட்டத்தை மீறுபவர்கள், போக்கிலிகள் போன்ற சமுதாய விரோத காரியங்களில் ஈடுபட்டவர்களைத் தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் கீழ் கைது செய்யப்படுவார்கள்.