தமிழ்நாடு
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தில்லை; ஒத்திவைப்பு: தமிழக அரசு
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் ரத்து செய்யப்படவில்லை எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளதகொரோனாவால் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்சி, மாநில அரசு பள்ளிகள் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுத் தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என அரசு அறிவித்திருந்தது. இதை முதல்வரும் செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனாலும் தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா என தொடர்ந்து குழப்பம் நிலவி வந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை தேர்வு இருக்கும் என விளக்கம் அளித்துள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் ரத்து செய்யப்படவில்லை எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. பொதுத்தேர்வு எப்போது என பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. 10ம் வகுப்பு தேர்வை மே மாதம் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.