தமிழ்நாடு
மனைவியின் சிகிச்சைக்காக 130 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம்!
ஊரடங்கால் பேருந்துகள் இயங்காததால், மனைவியின் புற்று நோய் சிகிச்சைக்காக 130 கிலோ மீட்டர் சைக்கிள் தம்பதிகள் சென்றது வைரலாகி வருகிறது.
கும்பகோணத்தில் வசிக்கும் 55 வயதான முதியவர் அறிவழகன், மாயவரம், சீர்காழி, கடலூர் என பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வரை, 130 கிலோ மீட்டருக்கு தனது மனைவி மஞ்சுளாவின் புற்றுநோய் சிகிச்சைக்காகச் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
கொரோனா சிகிச்சை காரணமாக அவசர சிகிச்சைகள் தவிர, பிற புற சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் ஊரடங்கால் சைக்கிளில் இருவரும் நெடுந்தொலைவிலிருந்து வந்ததை அறிந்த மருத்துவர்கள் தேவையான சிகிச்சையை அளித்துள்ளனர்.
மேலும் இரண்டு நாட்களுக்கு அவர்களுக்கான உணவு போன்றவற்றையும் வழங்கி, இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.