கிரிக்கெட்
ஐபில் தொடங்குவதில் சிக்கல் – கங்குலி!
கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே வருகின்ற ஏப்ரல் மாதம் 15-ம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், மீண்டும் ஒத்திவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்கூலி, கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதில் கடந்த 10 நாட்களாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. எனவே ஐபிஎல் போட்டி குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது.
மேற்கு வங்க அரசு கேட்டுக்கொண்டால், கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள அரைகளை மருத்துவ வசதிக்காகப் பயன்படுத்த அளிக்கத் தயாராக உள்ளோம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.