இந்தியா
கொரோனா-இந்தியாவில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு
கொரோனா-இந்தியாவில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு
கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஜனவரி கடைசி வாரத்தில் இந்தியாவில் முதல் கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து கர்நாடகா மாநிலம் வந்த முதியவருக்குத் தான் முதல் கொரோனா அறிகுறி தென்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்தியாவில் மார்ச் முதல் வாரத்தில் முதல் கொரோனா பலி ஏற்பட்டது.இன்று காலை குஜராத் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வந்த 55 நபர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம் நோயுற்றவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 415ஆக உயர்ந்துள்ளது.இது கடந்த வாரத்தை விட இரண்டு மடங்கு அதிகம் .