இந்தியா
கொரோனா வைரஸ் எதிரொலி… மார்ச் 31-ம் தேதி வரை நாடு முழுவதும் ரயில் சேவைகள் ரத்து!
கொரோனா வைரஸ் எதிரொலியாக, இன்று ஒரு நாள் நாடு முழுவதும் ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
எனவே இன்று ரயில், பேருந்துகள் ஏதும் ஓடவில்லை. இதை மேலும் நீட்டிக்கும் விதமாக மத்திய அரசு ரயில் சேவையை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது.
இதனால் பயணிகள் ரயில், புறநகர் ரயில் என்று அனைத்து ரரில் சேவைகளும் மார்ச் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சரக்கு ரயில் சேவை தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவையும் மார்ச் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.