தமிழ்நாடு
நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு
நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு
நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படுமென வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது .கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரும் விதமாக வரும் ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும் அனைத்து கடைகள்,உணவகங்கள் மூடப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தெரிவித்துள்ளது.
அதேபோல் ஞாயிற்றிகிழமை கோயம்பேடு மார்க்கெட்டும் மூடப்படும் என்று கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது .
நாளை மறுநாள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுவதால் காலை 7 மணி முன்னர் பால் விநியோகிக்கமுடியாது எனப் பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எனவே நாளையே அனைவரும் பால் வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .