தமிழ்நாடு
தேனியில் பெண் சிசுக்கொலை
தேனியில் பெண் சிசுக்கொலை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால் எருக்கம்பால் கொடுத்து அந்த பெண் சிசுக்கொலை செய்யப்பட்டுள்ளது .ஆண்டிபட்டியைச் சேர்ந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது.ஒரு மாதத்துக்கு முன் வயிற்று வலியால் அந்த குழந்தை இறந்தது என்று கூறப்பட்டது.குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதெனக் கிராம மக்கள் சைல்ட் லைன் அமைப்பினர்க்கும் ,கிராம நிர்வாக அலுவலர்க்கும் புகார் அளித்தனர்.
விசாரணையில் தாயும் ,பாட்டியும் சேர்ந்தே குழந்தையைக் கொலை செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது .
21ம் நூற்றாண்டிலும் பெண் சிசுக்கொலை நடப்பது வேதனைக்குரிய விஷயம் .