தமிழ்நாடு
திண்டுக்கல்லில் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா
திண்டுக்கல்லில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 6 இடங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது .
கடந்த மார்ச் 1ஆம் தேதி ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதல்வரும் துணை முதல்வரும் அடிக்கல் நாட்டினர் .
அதைத் தொடர்ந்து இன்று திண்டுக்கல்லில் அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதல்வரும் துணை முதல்வரும் அடிக்கல் நாட்டினர்.இந்த கல்லூரியில் மொத்தம் 150 இருக்கைக்கு ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது .
நீலகிரி ,திருப்பூர் ,நாமக்கல் ஆகிய இடங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது .இந்த 6 கல்லூரியையும் சேர்த்தால் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 24.அதேபோல் 3350 சீட்டில் இருந்து 4450 ஆக உயரும்.