வணிகம்
அதிர்ச்சி.. இனி இதற்கும் காலாவதி தேதி கட்டாயம்!
இந்தியாவில் திறந்தவெளியில் உணவுகள் விற்பனை செய்வது சாதாரணமான ஒன்று. இப்படித் திறந்த வெளியில் விற்கப்படும் உணவுகளுக்கு ஜூன் 1-ம் தேதி முதல் காலாவதி தேதி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் மாதம் முதல், திறந்த வெளியில் வைத்து விற்கப்படும் ஸ்வீட், உணவு வகைகள் தரமானது தானா? என்று ஆய்வு செய்து காலாவதி தேதி குறிப்பிடுவது குறித்து அந்தந்த மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உறுதி செய்ய வேண்டும் என்று” குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சிறிய அளவில் ஸ்வீட் கடை நடத்தி வருபவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள், அதற்காக ஒரு ஆய்வுக் கூடத்தைக் கடை உரிமையாளர்கள் நிறுவ வேண்டி வரும்.
பெரிய அளவில் வணிகம் செய்பவர்களுக்கு இது ஒரு கூடுதல் வேலையாக இருக்கும். ஆனால் சிறிய அளவில் ஸ்வீட் கடை போன்றவற்றை நடத்தி வருபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் தொடர்புகொண்ட போது, சிறிய அளவில் ஸ்வீட் கடை நடத்தி வருபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து இது போன்ற ஆய்வுகளைச் செய்து காலாவதி தேதி குறிப்பது குறித்து முடிவுகள் எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கடைகளின் நம்பத்தன்மை அதிகரிக்கும், தரம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.