கிரிக்கெட்
#INDvsNZ: சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில்லாக வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நியூசிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த டி20 தொடரில் இன்று டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் எடுத்தது.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்களை இழந்து 179 ரன்களை சேர்த்ததால் ஆட்டம் டை ஆனது.
எனவே இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 17 ரன்களை சேர்த்தது. இந்திய அணி ஒரு ஓவரில் 18 ரன்கள் அடித்தால் வெற்றி என்று விளையாட ஒரு ஓவரில் 20 ரன்கள் அடித்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.