தமிழ்நாடு
ரஜினி கருத்துக்கு சீமான் பதிலடி!
துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்று பேசிய ரஜினிகாந்த்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தக்க பதில் அளித்துள்ளார்.
பொங்கல் தினத்தன்று துக்ளக் பத்திரிக்கை விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “முரசொலி படிப்பவர்கள் திமுககாரர். துக்ளக் படிப்பவர்கள் என்று கூறியிருந்தார்.”
இது கடந்த சில வாரங்களாகவே தமிழக அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இன்று மதுரை தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “துக்ளக் படித்தால் அறிவாளி என்றால், அதை நீட் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டியது தானே?
முதலில் துக்ளக் புத்தகத்தை ரஜினி ரசிகர்களுக்குக் கொடுங்கள். அவர்கள் தான் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும், ரஜினி படம் வெற்றி பெற வேண்டும் என்று மண் சோறு சாப்பிடுகிறார்கள்.
துக்ளக் வைத்துள்ளவர்கள் அறிவாளிகள் கிடையாது. திருக்குறள் வைத்திருப்பவனே அறிவாளி” என்று சீமான கூறினார்.