கிரிக்கெட்
இந்திய தோல்விக்கு யார் காரணம்.. ரவி சாஸ்திரியா? கோஹ்லியா? அணியில் விரிசல்!
லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து, இந்திய அணியில் சிறிய அளவில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது.
இங்கிலாந்து இந்தியா மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. வெற்றிபெற வேண்டிய போட்டியில் தேவையில்லாமல் தோல்வி அடைந்தது.
இந்திய அணியில் கோஹ்லியை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் மோசமாக ஆடினார்கள். இதனால் தற்போது இந்திய அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கோஹ்லி சரியாக கேப்டன்ஷிப் செய்யவில்லை என்று புகார் எழுந்து இருக்கிறது. அவர் மோசமான அணி தேர்வை நடத்தி இருக்கிறார் என்று புகார் எழுந்துள்ளது.
அதேபோல், ரவி சாஸ்திரி போட்டியின் இடையில் தூங்கியதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. அவர் அணியை சரியாக வழிநடத்தவில்லை என்று புகார் வந்துள்ளது. இதனால் அணியில் சிறிய பிளவு ஏற்பட்டு இருக்கிறது.