பிற விளையாட்டுகள்
பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!
பிரபல அமெரிக்க கூடைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் கோபி பிரயன்ட் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.
41 வயதான கோபி பிரயன்ட் ஒரு தணியார் ஹெலிகாப்டரில் பயணித்த போது, தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் மரணம் அடைந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்க கூடைப்பந்தாட்ட சம்மேளன சாம்பியன் போட்டி வரலாற்றில் 5 முறை சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டவர் கோபி பிரயன்ட். 18 தடவைகள் என்பிஏ அனைத்து-நட்சத்திர வீரராகவும் தெரிவானார். உலகின் தலைசிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர்.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் கோபி பிரயன்ட் உடன் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அதில் கோபி பிரயன்ட் மகளும் ஒருவர் என்று கூறப்படுகிறது.
கோபி பிரயன்ட் உடலுக்கு சக விளையாட்டு நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.