இந்தியா
இனி ஓட்டு போட ஸ்மார்ட்போன் போதும்; புதிய சேவை அறிமுகம் செய்த தேர்தல் ஆணையம்!
டெல்லி சட்ட சபை தேர்தல் வரும் ஃபிப்ரவரி 8-ம் தேதி நடைபெற உள்ளது.
பொதுவாக வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட வாக்கு சீட்டு கட்டாயம். ஆனால் முதல் முறையாக வாக்கு சீட்டை மறந்து சென்று விட்டால், ஸ்மார்ட்போன் மூலம் ஓட்டு போடும் முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
எனவே ஓட்டு போட செல்லும் போது வாக்குச் சீட்டை மறந்து சென்று விட்டால், தேர்தல் ஆணையம், வாக்கு மையங்களில் வைத்துள்ள க்யூ-ஆர் குறியீட்டை ஸ்கான் செய்து வாக்கு சீட்டு பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
முதல் முறையாக இந்த சேவை டெல்லி தேர்தலில் 11 தொகுதிகளில் மட்டும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.