சினிமா செய்திகள்
வரியை திரும்பப்பெறாவிடில் தியேட்டர்கள் மூடல்!
தமிழகத்தில் தியேட்டர்களில் திரைப்படங்களைத் திரையிட 8 சதவீதம் மாநில வரி வசூலிக்கப்படுகிறது.
இந்த மாநில வரியை பிப்ரவரி மாதம் முடிவதற்குள் திரும்பப்பெறாவிட்டால், மார்ச் 1 முதல் போராட்டம் நடத்தப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரி மட்டுமல்லாமல், திரையிடப்படும் தோல்வி அடைந்தால், அந்த நட்டத்தைத் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், நடிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வரித்துள்ளனர்.
இதே பொன்று 2018-ம் ஆண்டு டிஜிட்டல் ப்ரொஜெக்ட்டர் கட்டணத்தை யார் செலுத்துவது என்பதில் தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் இடையில் பிரச்சினை ஏற்பட்டது.
பின்னர் சில வாரங்களுக்குப் பிறகு அதில் ஒரு சுமுக முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதனால் தயாரிப்பாளர்களுக்குப் பல கோடிகள் நட்டம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.