வணிகம்
ருச்சி சோயா நிறுவனத்தை ரூ.4,350 கோடிக்கு வாங்கிய பதஞ்சலி!
ருச்சி சோயா சமையல் எண்ணெய் நிறுவனத்தை வங்குவதில் பதஞ்சலி மற்றும் அதானி குழுமத்துக்கு இடையே மிகப் பெரிய போட்டி இருந்து வந்தது.
அதானி குழுமம் ருச்சி சோயா நிறுவனத்தை வாங்குவதில் மிகவும் ஆர்வம் காட்டி வண்டது. அதே நேரம் கடனில் சிக்கி தவித்து வரும் ருச்சி சோயா நிறுவனத்தைக் கைப்பற்றினால் பதஞ்சலியின் வருவாய் மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் பாபா ராம்தேவ் திட்டம் தீட்டி வந்தார்.
இந்நிலையில் பதஞ்சலி நிறுவனம் ருச்சி சோயாவை 4,350 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியுள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சர்யா பாலகிருஷ்ணா, ருச்சி சோயா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும் கவனத்தில்கொள்வார்.
பாபா ராம்தேவ் நிர்வாக பொறுப்புகள் அல்லாத இயக்குநராகத் தொடருவார்.