தமிழ்நாடு
உள்ளாட்சி தேர்தல் 2019: நாளை தொடங்கும் வேட்புமனு தாக்கல்!
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
மறுபக்கம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளைப் பின்பற்றாமல் தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று திமுக தரப்பு கூறி வருகிறது.