வேலைவாய்ப்பு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் வேலை!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் நாகப்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியங்களிலும் காலியிடங்கள் 14 உள்ளது. இதில் உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர், இரவுக்காவலர் போன்ற இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
வேலை செய்யும் இடம்: நாகப்பட்டினம்
மொத்த காலியிடங்கள்: 14
வேலை: அலுவலக உதவியாளர் – 08
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000
வேலை: எழுத்தர் – 01
மாத சம்பளம்: ரூ.15,900 – 50,400
வேலை: ஈப்பு ஓட்டுநர் – 02
மாத சம்பளம்: ரூ.19,500 – 62,000
வேலை: இரவுக்காவலர் – 03
மாத சம்பளம்: ரூ.15,700 – 50,000
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: குறைந்தபட்ச வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nagapattinam.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்திச் செய்த விண்ணப்பங்களைத் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர், ஆணையர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாக 02.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2019/11/2019111987.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 02.12.2019