இந்தியா
‘Where is my Train’ செயலியை பயன்படுத்தி ரயிலில் திருடிய கும்பல் கைது!
ரயில் பயணிகள் அதிகளவில் பயன்படுத்தும் ‘Where is my Train’ சென்ற செயலியைப் பயன்படுத்தி திருடும் கும்பலைச் சேர்ந்0த நபர் ஒருவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ரயில் புறப்படும் நேரம், சேரும் நேரம், எங்கு இருக்கிறது என்ற இவர்களை நேரலையாக அளிக்கும் செயலி ‘Where is my Train’.
இந்த செயலியை பயன்படுத்தி ரயில் எங்கு இருக்கிறது என்று தெரிந்துகொண்ட கும்பல் ஒன்று, தெலுங்கான மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ரயில் சிக்னலை மாற்றி கொள்ளை அடித்து வந்துள்ளனர்.
இப்படி தொடர்ந்து சிக்னல் மாற்றி கொள்ளை அடிப்பதை அறிந்த ரயில்வே காவல் துறையில் அதில் தொடர்புடைய பாலாஜி ஸ்ரீரங் ஷிண்டே என்ற நபரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது.
விரைவில் இந்த கொள்ளை கும்பல் முழுவதும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.