வணிகம்
நீங்களும் சூப்பர் மார்க்கெட்டில் ‘பை’-க்கு கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்களா?
ஹரியானாவில் ஃபியூச்சர் ரீடெயில் குழுமத்திற்குச் சொந்தமான பிக் பஜார் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிய பால்தேவ் ராஜ், அந்த பொருட்களை கொண்டு செல்ல பை கேட்ட போது 18 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பால்தேவ், எதற்காகக் கூடுதல் கட்டணம் வசூலித்தீர்கள் என்று கேட்ட போது, அதற்கு பிக் பஜார் ஊழியர்கள் அவரிடம் மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளார்.
அதை பொருத்துக் கொள்ளாத முடியாத பால்தேவ், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வாடிக்கையாளரின் அனுமதியுடன் தான் பைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. நாங்கள் பையை வணிக ரீதீயாக விற்பனை செய்வதில்லை என்று கூறப்பட்டது.
ஆனால், கடை முழுவதும் எந்த இடத்திலும் பைக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடவில்லை. கடைசியாகப் பொருட்களுக்குப் பணத்தைச் செலுத்தும்போது பைக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என்று பால்தேவ் தரப்பிலிருந்து கூறப்பட்டது.
கடைசியாக பிக்பஜார் நிறுவனம் செய்தது தவறு. அதுவும், கூடுதல் கட்டணம் வசூலித்த பிறகு வாடிக்கையாளருக்குத் தகுந்த மரியாதை அளிக்காததும் தவறு. எனவே பால் தேவிடமிருந்து வசூலிக்கப்பட்ட பைக்கான கட்டணம் 18 ரூபாய், வாடிக்கையாளரிடம் மோசமாக நடந்துகொண்டதற்காகவும், அதனால் ஏற்பட்ட மன உலைச்சலுக்காக 1000 ரூபாய், இந்த வழக்குக்கு வாடிக்கையாளர் செய்த செலவு 500 ரூபாயைத் திருப்பி அளிக்க வேண்டும் என்றும், நுகர்வோர் சட்ட உதவி கணக்குக்கு 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே, அடுத்த முறை இதுபோன்ற சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்லும் போது கவனமாக இருங்கள்.