பர்சனல் ஃபினான்ஸ்
இன்சூரன்ஸ் வாங்கும் முன்பு எச்சரிக்கையாக இருக்கவும்; ஐஆர்டிஏஐ எச்சரிக்கை!
தொலைப்பேசி மூலம் அழைத்து, இந்த இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கினால் அதிக பலன்கள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறுவதை நம்ப வேண்டும் என்று காப்பீட்டு ஒழுங்குமுறை வாரியமான ஐஆர்டிஏஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐஆர்டிஏஐ இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பு அல்லது அதற்கு தொடர்புடைய அமைப்பு அதிகாரிகள் என்று சொல்லி பொதுமக்களைத் தொடர்புகொண்டு, அதிக பயன் அளிக்கும் பாலிசிகள் என்று ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி வருவதாக ஐஆர்டிஏஐ-க்கு அதிக புகார்கள் வருகின்றன.
இதுபோன்ற அழைப்புகள் போலியானவை, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் இதுபோன்று யாரையும் தொடர்புகொள்வதில்லை. எனவே இன்சூரன்ஸ் வாங்கும் முன்பு வாடிக்கையாளர்கள் கவனமாக இருப்பது அவசியம். சலுகைகள் என்று கூறும்போது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகம் இருப்பின் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையங்கள் அல்லது அலுவலகங்களைத் தொடர்புகொள்ளலாம் என்று ஐஆர்டிஏஐ வெளியிட்ட எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.