சினிமா
மோசடி வழக்கில் சிறை: கவின் குடும்பத்துக்கு ஆதரவாக சாக்ஷி!
பிக் பாஸ் சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல சர்ச்சைகளில் சிக்கியவர் கவின். இவருக்கு ஆதரவாக ஒரு வட்டமும், எதிராக ஒரு வட்டமும் சமூக வலைதளத்தில் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள கவினின் குடும்பம் தற்போது சந்தித்திருக்கும் ஒரு பிரசானை சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படுகிறது. இதனால் கவினும் அவரது குடும்பமும் விமர்சிக்கப்படுகிறது.
கவினின் அம்மா ராஜலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இதனையடுத்து இந்த பண மோசடி வழக்கில் கவின் குடும்பத்தை சேர்ந்த அவரது அம்மா உட்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் கவினும் அவரது குடும்பமும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து இதுகுறித்து யாரும் விவாதிக்க வேண்டாம் எனவும், கவினின் தனிப்பட்ட வாழ்க்கையை விவாதமாக மாற்ற வேண்டாம் என முதல் பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் கவினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து சமீபத்தில் வெளியேறிய சாக்ஷியும் கவினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் சாக்ஷி, கவின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து அவரை விமர்சித்து வந்தார். இந்நிலையில் தற்போது குடும்ப பிரச்சனையில் சிக்கியுள்ள கவினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் சாக்ஷி. இந்த அசாதாரணமான சூழலில் கவின் குடும்பத்தினரைக் கிண்டலடிக்க வேண்டாம். எனக்கும் கவினுக்கும் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அவருடைய குடும்பத்தினரிடையே அல்ல. எனவே அவர்களைக் கிண்டலடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி. என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் சாக்ஷி.