தமிழ்நாடு
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 2 நாட்கள் மழை எச்சரிக்கை!
வடமேற்கு வங்கக்கடல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளதால் தமிழகத்துக்கு இரண்டு நாட்கள் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
கடைசி 24 மணி நேரத்தில் சேலம் ஓமலூரில் 4 செ.மீ மழையும், பள்ளிப்பட்டு, சோழவரம், செம்பரம்பாக்கம், திருவாலங்காட்டில் 3 சென்டி மீட்டர் மழையும் பொழிந்துள்ளது. இந்நிலையில் தற்போது உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையும் தெரிவித்துள்ளது.
மேலும், கேரளா, தெற்கு கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.