Connect with us

சினிமா

ஒப்பந்தம் தெளிவாக உள்ளது; மதுமிதா பிரச்சனை செய்வது தவறு: மீரா, சாக்‌ஷி கருத்து!

Published

on

பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதாவுக்கு விஜய் டிவி தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. சம்பள விவகாரத்தில் மதுமிதா தற்கொலை மிரட்டல் விடுத்ததாக விஜய் தொலைகாட்சி தரப்பு புகார் அளித்தது. இதனையடுத்து தனது தரப்பு விளக்கத்தை செய்தியாளர்களை சந்தித்து கொடுத்தார் மதுமிதா.

மதுமிதாவுக்கு மீதமுள்ள சம்பள தொகையை பின்னர் தருவதாகவும் விஜய் டிவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதித் தொகையை உடனே தர வேண்டும் என்றும் இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டியதாக மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்திருந்தது.

இந்நிலையில், இன்வாய்ஸ் அளித்த உடன் மீதித் தொகையை தந்துவிடுவதாக நிகழ்ச்சி நிர்வாகம் கூறியது. எனது கணவர் சென்று இன்வாய்ஸ் அளித்தபின்னர் விரைவில் சம்பளத்தை தந்துவிடுவதாக கூறினர். ஆனால் அதைத் தொடர்ந்து இப்போது ஏன் இப்படி புகார் அளித்தனர் என்று எனக்கு தெரியவில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் மதுமிதா.

இதனையடுத்து அவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீரா மிதுன் இதுகுறித்து கூறியபோது, எனக்கும் சேனலுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. மதுமிதா தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையை எதிர்கொண்டார் எனத் தெரியவில்லை. எங்கள் இருதரப்புக்குமிடையே நல்ல பிணைப்பு உள்ளது. மரியாதையாக நடந்துகொள்வார்கள், நன்றாக கவனித்துக்கொண்டனர் என்றார்.

சாக்‌ஷி அகர்வால் கூறியபோது, 100 நாள்கள் முடிந்தபின்னர் தான் மீதிப் பணம் தரப்படும் என்று ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் எந்த கேஸும் அளிக்கவில்லை. அதனால் இதுபோன்று மதுமிதா நடந்துகொண்டிருக்க கூடாது. அவரது ஒப்பந்தத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று தெரியவில்லை என்றார்.

இந்தியா3 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்3 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!