Connect with us

இந்தியா

போலி எண்கவுண்டர் வழக்கில் தன்னை கைது செய்ததற்காக ப.சிதம்பரத்தை பழிவாங்குகிறாரா அமித் ஷா?

Published

on

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கியுள்ளார். அவரது முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் அவரை கைதுசெய்ய சிபிஐ, அமலாக்கத்துறை தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லாமல் இருக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரத்தை பழிவாங்குவதற்காகத்தான் அமித் ஷா இப்படி செய்வதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

ஆனால் அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கூறியதையடுத்து அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். இதனையடுத்து அவரை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரது டெல்லி வீட்டிற்கு சென்றது. ஆனால் அவர் அங்கு இல்லாததால் வீட்டில் நோட்டீஸை ஒட்டிச்சென்றனர். கைது செய்யப்படாமல் இருக்க அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று காலை விசாரித்த நீதிபதி ரமணா, இது ஊழல் தொடர்பான விவகாரம் என்பதால் உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கைவிரித்துவிட்டது. இதனால் ப.சிதம்பரம் கைது செய்யப்படும் சூழல் முற்றியுள்ளது. இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ப.சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ப.சிதம்பரம் வெளிநாட்டிற்கு செல்லாமல் தடுக்கவே அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது ப.சிதம்பரம் 2010-ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்தபோது குஜராத் போலி எண்கவுண்டர் வழக்கில் அமித் ஷா கைது செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காகவே தற்போது அமித் ஷா உள்துறை அமைச்சராக இருக்கும் போது ப.சிதம்பரம் கைது செய்யப்படும் நிலையில் உள்ளார் என பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!