தமிழ்நாடு
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு லண்டனில் சிகிச்சையா? எதற்காக?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வருகிறது. இந்த வெளிநாட்டு பயணத்தின் போது அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் திட்டமிடப்பட்ட ஒன்று. இந்த பயணத்தில் முதலில் லண்டன் செல்லும் எடப்பாடி பழனிசாமி அடுத்து அமெரிக்கா என மொத்தம் 13 நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் லண்டன் பயணத்தின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பார் என கூறப்படுகிறது.
காரணம் எடப்பாடி பழனிசாமிக்கு லண்டனில் முழு ஹெல்த் செக்கப் செய்யப்பட உள்ளதாம். இதற்காக லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் இப்போதே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டு விட்டதாம். முதல்வரின் இந்த வெளிநாட்டு பயணம் தமிழக அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என சில தகவல் கசிந்து வரும் நிலையில் அவரது இந்த லண்டன் சிகிச்சை விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.