Connect with us

கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சென்னையில் தற்கொலை!

Published

on

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் நேற்று மாலை தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். 57 வயதான வி.பி.சந்திரசேகர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

1988 டிசம்பர் 10-ஆம் தேதி வைசாக்கில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவுக்காக விளையாடிய வி.பி.சந்திரசேகர் மொத்தம் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 88 ரன்கள் எடுத்துள்ளார். 81 முதல் தர போட்டிகளில் 4999 ரன்கள் எடுத்த அவர் அதிகபட்சமாக 237 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். ஓய்வுக்குப் பின், தமிழக அணிக்கு பயிற்சியாளராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலாளராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.

தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருந்து வந்தார். சென்னை மயிலாப்பூரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் வி.பி.சந்திரசேகர், நேற்று மாலை 5.45 மணிக்கு டீ அருந்திவிட்டு, தனது அறைக்குள் சென்று வெகுநேரமாகியும் வெளியே வராததால், கதவை உடைத்து குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வி.பி.சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல் கட்ட விசாரணையில், கடன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வி.பி.சந்திரசேகர் மறைவிற்கு சச்சின், சுரேஷ் ரெய்னா, முகமது கைஃப் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியா5 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்6 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!