Connect with us

தமிழ்நாடு

தலைகீழாக மாறியது வேலூர் நிலவரம்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை!

Published

on

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் அதிமுக வேட்பாள ஏர் ஏசி சண்முகம் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். ஆனால் தற்போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காலை 9 மணிக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் இருந்தார். ஆனால் 9.15 மணி முதல் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மீண்டும் முன்னிலை பெற்றார். தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகமே முன்னிலை வகித்து வந்ததால் திமுக வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு சற்று மங்க ஆரம்பித்தது. இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகக்குறைவாக 2000 முதல் 3000 என நீடித்து வந்ததால் யார் வெற்றிபெறுவார் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவி வந்தது.

வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதில் பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.

இதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகமே தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த நிலையில் தற்போது நிலவரம் அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 11547 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 10 லட்சம் வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் இதுவரை 8 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டன. இன்னும் 2 லட்சம் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இதில் தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 391579 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 380032 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 21419 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 11547 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இந்தியா4 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு7 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!