சினிமா செய்திகள்
சமுத்திரக்கனியுடன் கைகோர்க்கும் விஷால்!
![samuthrakani-vishal-5819m - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/08/samuthrakani-vishal-5819m.jpg)
நாடோடிகள் 2வை தொடர்ந்து சமுத்திரகனி இயக்கும் புதிய படத்தில் நடிக்க விஷாலை தேர்தெடுத்துள்ளார்.
பல படங்களின் கதாநாயகனாகவும் முக்கிய வேடங்களிலும் நடித்து வந்த சமுத்திரக்கனி தற்போது நாடோடிகள் படத்தின் 2ஆம் பாகத்தை தயாரித்து முடித்தார். அந்த படத்தின் டிரைலர் சமிபத்தில் வெளியனது.
இந்திரா சவுந்தர்ராஜன் எழுதிய சிவம் என்னும் நாவலை படித்த சமுத்திரக்கனி இந்த கதைக்கு விஷால் பொருத்தமாக இருப்பார் என அவரிடம் கதையை கூறியுள்ளார். விஷாலுக்கும் இந்த கதை பிடித்திட, கதையின் படப்பிடிப்பு உரிமையை பெற்றுள்ளனர்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.