தமிழ்நாடு
ஸ்டாலினின் ரகசிய கூட்டத்தில் குண்டு வைத்தால்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழக அரசியல்வாதிகளில் வித்தியாசமானவர் மனதில் தோன்றுவதை அப்படியோ தயங்காமல் பேசக்கூடியவர். அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அதிரடி கருத்துக்களை கூறுபவர்.
இந்நிலையில் தற்போது வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் உள்ள ராஜேந்திர பாலாஜி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அதிரடி கருத்து ஒன்றை கூறியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்திய திருமண மண்டபத்துக்கு சீல் வைத்ததோடு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தேர்தல் நேரத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு முறைப்படி தேர்தல் ஆணையத்தில் அனுமதி வாங்க வேண்டும். இந்த அடிப்படை அறிவுகூட ஸ்டாலினுக்கு தெரியாதா? அனுமதியின்றி ஸ்டாலின் போட்ட ரகசிய கூட்டத்தில் யாராவது குண்டு வைத்தால். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது? சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். இந்த ஆட்சி மீது சட்ட சிக்கலை ஏற்படுத்தும் நோக்கில் ஸ்டாலின் நடவடிக்கைகள் உள்ளன என்றார்.