தமிழ்நாடு
சேகர் ரெட்டி வீடுகளில் சிக்கிய பணம் எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்த பணம்தான்: கிழிகிழியென கிழித்த ஸ்டாலின்!
![Edappadi Smile - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/Edappadi-Smile-2.jpg)
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்.
வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், ஸ்டாலின் கனவு கண்டுகொண்டிருக்கிறார். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதிமுக ஆட்சியை அழிக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நான் கனவு காணவில்லை. விரைவில் அது நனவாக நடக்கப் போகிறது என்றார். மேலும், சாதாரண தொண்டன் என்று தன்னை முதல்வர் கூறிக்கொள்கிறார். எம்பியாக, எம்எல்ஏவாக பலமுறை இருந்த அவர் தொண்டரா? ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பணத்தைக் கொள்ளையடித்துக் கொடுப்பதற்காக ஐந்து பேர் இருந்தனர்.
அவர்களில் இவரும் முக்கியமான ஒருவர். பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்யவைத்த பிறகு எடப்பாடி பழனிசாமியை, சசிகலா முதல்வராக்கினார். ஏனெனில் அவர்தான் பர்சென்டேஜை சரியாகக் கொடுப்பார். கொள்ளையடித்த பணம் அவரிடம்தான் இருக்கிறது என்பதால் அவ்வாறு செய்தார். செய்யாதுரை, சேகர் ரெட்டி வீடுகளில் நடந்த ரெய்டில் சிக்கிய பணம், இவர் ஊழல் செய்த பணம்தான் என முதல்வரை கடுமையாக விமர்சித்தார் ஸ்டாலின்.