தமிழ்நாடு
ராஜ ராஜ சோழன் விவகாரம்: மீண்டும் மீண்டும் பேசி சர்ச்சையை கிளப்பும் ரஞ்சித்!
சமீபத்தில் ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு சென்று முன்ஜாமீன் பெற்றிருக்கும் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது மீண்டும் அந்த விவகாரம் குறித்து பேசி சர்ச்சையுல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ராஜ ராஜ சோழன் குறித்து விமர்சித்த ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கும் முன்னர் நீதிபதிகள் அவரிடம், ஆயிரம் ஆண்டுகள் கழித்து ராஜராஜ சோழன் குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? இன்றும் அரசு மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி அதற்கான நிவாரணங்களை வழங்குகிறது. அவ்வாறு இருக்கும்போது நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக ராஜராஜ சோழனை மட்டும் குறிப்பிடுவது ஏன்? பேசுவதற்கு பல்வேறு விஷயங்கள் இருக்கும் போது மக்கள் கொண்டாடும் மன்னன் ஒருவனை இவ்வாறு பேசுவது ஏன் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியும் இதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியும் முன்ஜாமீன் வழங்கினர்.
இந்நிலையில் நேற்று புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய பா.ரஞ்சித்திடம் ராஜராஜசோழன் பற்றி பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நான் பேசியதால் மற்றவர்கள்தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். ராஜராஜன் உயிரோடு இருந்திருந்தால் என் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டிருப்பார். வாருங்கள் விவாதம் செய்யலாம் என்று கூறியிருப்பார். ஆனால், ராஜராஜன் பேரன்கள் வேறு வேறு சாதியில் இருப்பதால் அந்த பேரன்கள் எல்லாம் மன உளைச்சல் அடைகிறார்கள்.
நான் அம்பேத்காரின் வளர்ப்பு, எவனுக்கும் பயப்படமாட்டேன். நான் இப்படித்தான் பேசவேண்டும் என்று நீ வரையறை செய்யாதே. எனக்கு குரலே கிடையாதா? என் குரலை பதிவு செய்வேன். என்னை கோபப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என ரஞ்சித் பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு நீதிமன்ற உத்தரவை மீறும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் அமைந்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.